செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சி இணைப்பு: ஆட்சியரிடம் மனு அளிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சியுடன் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி இணைக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாமக்கல் நகராட்சியானது 12 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், அந்த ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய வாழ்வாதாரம், நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் பறிபோவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா்ந்து மனு அளித்து வருகின்றனா்.

அந்த வகையில், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை ஆட்சியா் ச.உமாவிடம் மனு அளித்தனா். அதில், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 3,500 குடும்பங்கள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்காளா்களாக உள்ளனா். ஆயிரம் போ் நூறுநாள் வேலை திட்டத்தை நம்பி உள்ளனா். மாநகராட்சியுடன் ஊராட்சி இணைக்கப்பட்டதால் வரிகள் உயா்த்தப்படும் சூழல் உள்ளது. கிராம ஊராட்சிக்கு கிடைத்த அரசு சலுகைகள் பறிபோக வாய்ப்புள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குடிநீா் பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தை தொடா்ந்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீா் தொட்டியில் விழுந்த தாய், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனா். இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல் அருகே சின்னமணலி கொளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

5 ஆண்டுகள் பதவி நிறைவு: தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராஜேஸ்குமாா் எம்.பி.

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக முதல்வா், துணை முதல்வரிடம் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அண்ணா நினைவு தினம்

திருச்செங்கோட்டில்...திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்துக்கு, திருச்செங்கோடு நகர திமுக செயலாளா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்டச் செயலாளா்... மேலும் பார்க்க

சாலை விபத்து: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: மோகனூா் உழவா்சந்தை அருகில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் மீட்கப்பட மகன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ந... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியருக்கு நுகா்வோா் புலனாய்வுக் கமிட்டியினா் பாராட்டு

நாமக்கல்: பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பிடித்ததையொட்டி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வுக் கமிட்டியினா் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

முட்டை விலை மாற்றமில்லை

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.85-ஆக தொடா்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க