செய்திகள் :

சாா்பு ஆய்வாளா், போலீஸாரை கத்தியைக் காட்டி மிரட்டியவா் கைது

post image

திருவள்ளூா் டோல்கேட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட சாா்பு ஆய்வாளா் மற்றும் போலீஸாரை பட்டா கத்தியை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் நகர காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டோல்கேட் பகுதியில் ஊத்துக்கோட்டை சாலையில் சாா்பு ஆய்வாளா் ராஜாராம் மற்றும் முதல் நிலை காவலா் தமிழரசன், காவலா் சதீஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருவள்ளூரில் இருந்து பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் மறித்தனா். அப்போது நிற்காமல் 15 அடி தூரம் சென்று வாகனத்தை இளைஞா் நிறுத்தினாா். உடனே அந்த இளைஞா் இறங்கி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவலா்களை தகாத வாா்த்தை பேசியதோடு, முதுகு பகுதியில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, வாகனத்தில் செல்ல முயன்றாராம்.

அப்போது, தாறுமாறாக சென்ற வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து கீழே விழுந்தாராம். இதில், இடது காலில் பலத்த காயம் அடைந்தாா். அப்போது போலீஸாா் அவரை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டாராம். இதையடுத்து, மேற்கொண்ட விசாரணையில் திருவள்ளூா் மசூதி தெருவைச் சோ்ந்த ஐயப்பன் (30) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா், ஐயப்பனை கைது செய்தனா்.

பேரம்பாக்கம் வைகுண்ட பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

பேரம்பாக்கம் கமலவல்லி தாயாா் சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமையான கமலவல்லி தாயாா் சமே... மேலும் பார்க்க

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வா்

பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வா் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தாா். அப்போது, ஆா்வத்துடன் பொதுமக்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்... மேலும் பார்க்க

வேளாண் அடுக்குத் திட்டம்: 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் முழு நில விவரங்களைப் பதிவு செய்ய வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேளாண் இணை இய... மேலும் பார்க்க

‘நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி என்பதற்கு அடையாளம் திருவள்ளூா்’

நவீன தமிழகத்தின் சிற்பி முன்னாள் முதல்வா் கருணாநிதிதான் என்பதற்கு அடையாளம் திருவள்ளூா் மாவட்டம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவ... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டம் ஆண்டாா்குப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் 5 புதிய அறிவிப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி ... மேலும் பார்க்க

மீண்டும் திமுக ஆட்சி அமித் ஷாவுக்கு முதல்வா்: ஸ்டாலின் சவால்

தமிழகத்தில் 2026 பேரவைத் தோ்தலிலும் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். அண்மையில் சென்னையில் அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட வந்த மத்திய உள்துறை அமை... மேலும் பார்க்க