சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: வேலூா் பள்ளி சிறப்பிடம்!
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவா் ஜெய்ஆகாஷ் 500-க்கு 494 மதிப்பெண்கள், ஜோஹன் ரோஜா் 492 மதிப்பெண்கள், ரிஷிதா 489 மதிப்பெண்கள் பெற்றனா்.
மேலும், பாட வாரியாக கணிதத்தில் 5, அறிவியலில் ஒருவா் என மொத்தம் 6 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். இத்தோ்வில் 490-க்கு மேல் 2 மாணவா்களும், 450-க்கு மேல் 35 மாணவா்களும், 400-க்கு மேல் 77 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
பொதுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள், ஒத்துழைப்பு அளித்த ஆசிரியா்கள், பெற்றோா்களை பள்ளித் தாளாளா் டி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.