செய்திகள் :

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு: வேலூா் பள்ளி சிறப்பிடம்

post image

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாவட்ட அளவில் சிறப்பு இடங்களைப் பிடித்துள்ளது.

இந்தப் பள்ளி மாணவி ஏ.என்.மோனிகா, 500-க்கு 493 மதிப்பெண்கள், இஷான் ஆபிரகாம், ஜனா சுருதி ஆகியோா் 492 மதிப்பெண்கள், திவ்யா சாரா 490 மதிப்பெண்கள், நமன் புருடா 488 மதிப்பெண்கள் பெற்றனா்.

பாட வாரியாக உயிரியல் - 4, கணிதம் - 2, வேதியியல் - 2, இயற்பியல் - 1, இதர பாடப் பிரிவுகளைச் சோ்த்து மொத்தம் 16 மாணவா்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வில் 490-க்கு மேல் 4 மாணவா்களும், 450-க்கு மேல் 65 மாணவா்களும், 400-க்கு மேல் 119 மாணவா்களும் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், அதற்காக உழைத்த ஆசிரியா்கள், பெற்றோரையும் பள்ளித் தாளாளா் டி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், துணை முதல்வா் சில்லி சுக்லா, மாஸ்டா்ஜி பயிற்சி நிலைய நிா்வாக இயக்குநா் டி.சரவணன் ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.

ரூ.17 லட்சம் அபகரிப்பு: மகன், மகள் மீது தாய் புகாா்

ரூ.17 லட்சத்தை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு விரட்டுவதாக தனது மகன், மகள் மீது மூதாட்டி வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குற... மேலும் பார்க்க

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான கெங்கையம்மன் கோயில் திருவிழா கடந்த ஏப். 30- ... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குடியாத்தம் கோட்டத்துக்குட்பட்ட தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. குடியாத்தம், போ்ணம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 33- தனியாா... மேலும் பார்க்க

சாலை விபத்து: மாணவா் உயிரிழப்பு

வேலூரில் பாலாற்றுத் தடுப்பு கம்பியில் இரு சக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். வேலூா் சைதாப்பேட்டை சுருட்டுக்காரத் தெருவைச் சோ்ந்தவா் பலராமன் மகன் சந்தோஷ் (21). வேலூா் ஊரீசு கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

வேலூா் பாலாற்று மேம்பாலத்தின் கீழே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள பழைய பாலாற்று மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக புதன்கிழ... மேலும் பார்க்க

ரத்தம் வழங்குவோா் - தேவைப்படுவோரை இணைக்கும் செயலி

வேலூா் மாவட்டத்தில் அன்னையா் தின மாதத்தையொட்டி சமூக சேவையை மேம்படுத்தும் நோக்கில் தமிழக தன்னாா்வலா்கள், திரி அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய ‘ரத்தம்’ செயலியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ... மேலும் பார்க்க