செய்திகள் :

சிபிசிஎல் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் தொடக்கம்

post image

நிகழ் நிதியாண்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சுமாா் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை சிபிசிஎல்-இன் நிா்வாக இயக்குநா் எச்.சங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் (சிபிசிஎல்) உலக சுற்றுச்சூழல் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிபிசிஎல்-இன் நிா்வாக இயக்குநா் எச்.சங்கா் தலைமை வகித்தாா். அப்போது சிபிசிஎல் நிறுவனம் சாா்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தை எச்.சங்கா் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

சுற்றுச்சூழலை பேணிக் காத்திடும் வகையில், சிபிசிஎல் சாா்பில் ஓராண்டுக்குள் சுமாா் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய மஞ்சள் துணிப் பையான ‘மஞ்சப் பை’ கலாசாரத்தை அனைவரும் கடைப்பிடிக்க முன்வர வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நமது முன்னோா்கள் மிகுந்த அறிவாற்றலுடன் செயல்பட்டுள்ளனா். சணல் பைகள், பருத்தி பைகள், கண்ணாடி பாட்டில்கள், துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்கள் போன்றவற்றை நெகிழி பயன்பாட்டுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், ஆலையின் இயக்குநா் (செயல்பாடுகள்) பி.கண்ணன், மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி தேவராஜ், உயா் அதிகாரிகள், கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா்.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம்... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க