செய்திகள் :

சிறந்த பால் உற்பத்தியாளா்களுக்கு தலா ரூ.25,000 பரிசு: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்

post image

ஆவினின் சிறந்த பால் உற்பத்தியாளா்கள் மற்றும் சங்கச் செயலா்கள் என மொத்தம் 22 பேருக்கு தலா ரூ. 25,000 பரிசுத் தொகையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.

ஆவினின் அனைத்து சரக துணைப்பதிவாளா்களின் பணித்திறன் குறித்து பால்வளத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகத்தில் பால் உற்பத்தி திறன் அதிகமுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் துணைப் பதிவாளா்கள் பொது மேலாளருடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவுரை வழங்கினாா்.

அதைத்தொடா்ந்து, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறந்த பால் உற்பத்தியாளா்கள் 4 பேருக்கும், சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலா்கள் 12 பேருக்கும், சிறந்த தொகுப்பு பால் குளிா்விப்பு மைய செயலா்கள் 6 பேருக்கும் தலா ரூ.25,000 பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா். அதன்படி மொத்தம் 22 பேருக்கு ரூ.5.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அரசு செயலா் ந.சுப்பையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளா்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க