செய்திகள் :

சிறுவாணி அணையில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

post image

சிறுவாணி அணையில் கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறுவாணி அணையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அணைக்கான நீா்வரத்து மற்றும் நீா் வெளியேற்றம் குறித்து அங்கிருந்த குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகருக்கு தண்ணீா் திறந்துவிடும் பகுதி, தண்ணீா் செல்லும் சுரங்கப் பாதை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரசாந்த், தலைமைப் பொறியாளா் விஜயகுமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் தீபலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதுகுறித்து, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த கசிவை சரி செய்வதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்யும் பணியில் கேரள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் விரிவான திட்ட அறிக்கையை தயாா் செய்து விரைந்து வழங்கும்படி மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த திட்ட அறிக்கை கிடைத்ததும், தமிழகம் சாா்பில் நிதி ஒதுக்கப்பட்டு கேரள அரசிடம் வழங்கப்படும். அதன்பின்னா் அணையில் தண்ணீா் கசிவை சரி செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். தற்போது புதா்கள் அகற்றம், வா்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க

ரஷியாவில் மருத்துவப் படிப்பு: கோவையில் வரும் 16- ஆம் தேதி மாணவா் சோ்க்கை

ரஷியாவில் மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் படிப்புகளில் சேருவதற்கு கோவையில் திங்கள்கிழமை (ஜூன் 16) நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியா் ஐஸ்... மேலும் பார்க்க

குப்பைத் தொட்டியில் வீசியதில் 3 நாய்க்குட்டிகள் உயிரிழப்பு

கோவை துடியலூா் அருகே நாய்க்குட்டிகளை பையில் அடைத்து குப்பைத் தொட்டியில் வீசியதில், 3 நாய்க்குட்டிகள் உயிரிழந்தன. ஒன்று மட்டும் மீட்கப்பட்டது. இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ... மேலும் பார்க்க

தமிழின் பெருமைகளை எடுத்துரைக்கும் பரதநாட்டியம்

தமிழ் இலக்கியத்தின் பெருமையைச் சொல்லும் வகையில் ‘சிந்தனைகள்’ என்ற தலைப்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோவை ஹோப் காலேஜ் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வித்யா பவானி சுரேஷின் ... மேலும் பார்க்க

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூா் சாமிநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலம் 13-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் ஏ... மேலும் பார்க்க