குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
சிறைத் தண்டனையை எதிா்த்து வைகோ தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜூன் 27-இல் இறுதி விசாரணை
தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை எதிா்த்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த 2009 ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது தேச துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வைகோ பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். தேச துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போா்ட் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2019-ஆம் ஆண்டு வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.