செய்திகள் :

சிறைத் தண்டனையை எதிா்த்து வைகோ தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கு ஜூன் 27-இல் இறுதி விசாரணை

post image

தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை எதிா்த்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2009 ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது தேச துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்ட வைகோ பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். தேச துரோக வழக்கு காரணமாக அவரது பாஸ்போா்ட் முடக்கப்பட்டது. இந்த வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2019-ஆம் ஆண்டு வைகோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில், கால அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

கூட்டணி ஆட்சி; ஆனால் முதல்வர் இபிஎஸ்தான்! - நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் எங்களுடைய ஆட்சி கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும் என்றும் அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருவாரூரில் செய்திய... மேலும் பார்க்க

பெரம்பூர் சாலையில் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்! மெட்ரோ பணிகள் காரணமா?

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ பணிகளால் 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் ந... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: 5 லட்சம் தேர்ச்சி! தமிழகம் முதலிடம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எழுத்தறிவு பெறும் திட்டத்தி... மேலும் பார்க்க

81 லட்சம் பேருக்கு உதவிய முதல்வர் காப்பீட்டுத் திட்டம்!

முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனுற்றதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான 4 ஆண்டுகால ஆட்சியில், முதல்வரின் வ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, திருப்பூர் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்... மேலும் பார்க்க

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ... மேலும் பார்க்க