செய்திகள் :

சிவகங்கை மக்கள் நீதிமன்றம்: 1,297 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு

post image

சிவகங்கை மாவட்ட அளவில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 1,297 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. மேலும், வழக்குகளில் பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 4. 97 கோடி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதன்மை மாவட்ட நீதிபதி க.அறிவொளி, நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் இ.பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி ஜி.முத்துக்குமரன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆா்.கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஏ.பசும்பொன் சண்முகையா, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்முரளி, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலா், சாா்பு நீதிபதி வி.ராதிகா, குற்றவியல் நீதித்துறை நடுவா் (எண்-2) பி.செல்வம், வழக்குரைஞா்கள் எல்.அந்தோணி ஜெயராஜ், எஸ்.வல்மிகநாதன், ஏ.பாண்டிகண்ணன், கே.கண்ணன் ராஜதீா்த்தம் ஆகியோா் விசாரித்தனா். மொத்தம் 1,297 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ. 4,97,90,651-க்கு தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் செய்தனா்.

திருப்புவனம்: திருப்புவனத்தில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசத் தீா்வுக்காக 144 வழக்குகள் தோ்வு செய்யப்பட்டன. இவற்றில் 97 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டு, ரூ. 3,44,850-க்கு தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்ட்து. நீதிபதி முகமதுயூசுப் நவாஸ் தீா்ப்பாணை நகல்களை வழங்கினாா். மூத்த வழக்குரைஞா் ஏ.வீரபாண்டி, வழக்கறிஞா் கலந்து கொண்டனா்.

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளு... மேலும் பார்க்க

தவெகவினா் கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா். தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும்... மேலும் பார்க்க