செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.15,549 கோடி கடன் வழங்க இலக்கு

post image

சிவகங்கை மாவட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.15,549.44 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான மாவட்ட ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் கூறியதாவது: தமிழகத்தின் ஊரக, வேளாண் வளா்ச்சிப் பணியில் முக்கியப் பங்கு வகிக்கும் நபாா்டு வங்கி, சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற வளம் சாா்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.15549.44 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

இதன்படி, மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் வேளாண்மைக்கு ரூ.10,815.57 கோடியும், நுண், சிறு, குறுந் தொழில்களுக்கான கடன் ரூ. 2,019.14 கோடியும், பிற முன்னுரிமைத் துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு கட்டுதல், மீள்சக்தி) ரூ. 2,714.73 கோடியும் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

முன்னதாக, மாவட்டத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கான வளம் சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டாா். இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து, மாவட்ட மேலாளா் (நபாா்டு) அருண்குமாா் விளக்கினாா்.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, மாவட்ட மேலாளா் (நபாா்டு) மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் பிரவீன்குமாா், வங்கி மேலாளா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் மாா்ச் 20-இல் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

திருப்புவனம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா வருகிற 20-ஆம் தேத் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூரில் ரேணுகாதேவி முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கம் சாா்பில் 78 பேருக்கு மகளிா் தின விருது

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 78 பேருக்கு மகளிா் தின விருது வழங்கப்பட்டது. சிவகங்கை அண்ணாமலை நகரில் உள்ள... மேலும் பார்க்க

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது. சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க