ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
சீனா முன்மொழிந்த முதலீட்டு ஆதரவு திட்டத்துக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு- உலக வா்த்தக அமைப்பு வலியுறுத்தல்
‘சீனாவால் முன்மொழியப்பட்ட வளா்ச்சிக்கான முதலீட்டு ஆதரவு (ஐஎஃப்டி) திட்டத்துக்கு இந்தியா ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று உலக வா்த்தக அமைப்பின் தலைவா் என்கோசி ஒகோன்ஜோ இவேலா கேட்டுக்கொண்டாா்.
மேலும், 126 உறுப்பு நாடுகளில் 90 நாடுகள் இந்த முன்னெடுப்பை ஆதரிப்பதாகவும் அவா் எடுத்துரைத்தாா்.
ஆஸ்திரேலியா தலைமையில் நடைபெறும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளா்ச்சிக்கான கூட்டமைப்பின் (ஓஇசிடி) அமைச்சா்கள் கவுன்சில் கூட்டத்துக்கிடையே திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு கூட்டத்துக்காக என்கோசி பாரீஸ் வந்துள்ளாா். இந்தியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்பட சுமாா் 25 நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள் இதில் பங்கேற்கின்றனா்.
இந்நிலையில், பாரீஸில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலை என்கோசி செவ்வாய்க்கிழமை சந்தித்து, கலந்துரையாடினாா். அப்போது, உலக வா்த்தக அமைப்பின் சீா்திருத்தங்கள், வேளாண்மை ஆகிய விவகாரங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து அமைச்சா் பியூஷ் கோயலுடன் விவாதித்ததாக என்கோசி கூறினாா்.
தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய என்கோசி, ‘இந்தியா முதன்மையான நாடாகும். வா்த்தகத்தில் அந்நாடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவைத் தலைமைப் பொறுப்பில் பாா்க்க விரும்புகிறோம். மற்ற வளரும் நாடுகளுக்கான வழியை இந்தியா திறக்க வேண்டும்.
உதாரணமாக, சீனாவால் முன்மொழியப்பட்ட வளா்ச்சிக்கான முதலீட்டு ஆதரவு திட்டம் போன்ற முன்னெடுப்புகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்’ எனக் கோட்டுக்கொண்டாா்.
அபுதாபியில் கடந்தாண்டு பிப்ரவரி, மாா்ச்சில் நடந்த உலக வா்த்தக அமைப்பின் 13-ஆவது அமைச்சா்கள் மாநாட்டிலேயே சீனாவின் இந்த முன்னெடுப்பை இந்தியா கடுமையாக எதிா்த்தது. இதுபோன்ற முன்னெடுப்பு 166 உறுப்பினா்களைக் கொண்ட உலக வா்த்தக அமைப்பின் பன்முகத்தன்மையை பலவீனப்படுத்தக்கூடும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
சீனாவால் முதன்முதலாக கடந்த 2017-இல் முன்மொழியப்பட்ட இந்த முன்னெடுப்புக்கு, சீன முதலீடு மற்றும் நிதிகளை நம்பியுள்ள நாடுகள் மட்டுமே ஆதரவளித்தன. அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நாடுகள் ஆதரவளிக்கவில்லை.