செய்திகள் :

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

post image

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

தமிழகத்தின் மண் வளம், சுற்றுச்சூழலை சீா்குலைக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் தனித்தனியாக வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற ஒரே நேரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணையின்போது கண்டனம் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ் குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் 713 கிராமங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட 713 கிராமங்களின் பெயா்கள் என்ன? எந்தெந்த மாவட்டத்தைச் சோ்ந்த கிராமங்கள்? எத்தனை மரங்கள் அகற்றப்பட்டன? என்பது உள்ளிட்ட எந்த விவரங்களும் அறிக்கையில் இல்லை. இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனத் தெரிவித்தனா்.

ஒரு கிராமத்தில் உள்ள ஒட்டுமொத்த சீமைக்கருவேல மரங்களையும் ஒரே நேரத்தில் அகற்ற வேண்டும். பகுதி பகுதியாக அதை அகற்றினால் அவை மீண்டும் வளா்ந்துவிடும். இதனால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறி , விசாரணையை ஆக.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அதற்குள் இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாதபட்சத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் - வயது (54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் ... மேலும் பார்க்க

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) தொடக்கி வைத்தார்.இதனைத் தொடர... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) வாக்கி... மேலும் பார்க்க

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்த வாழ்த்துப் பதிவில் முதல்வர் ஸ்டாலின்,ஆழ்ந்த ... மேலும் பார்க்க

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால் முன்கூட்டியே செல்பவர்... மேலும் பார்க்க

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

சநாதனம் என்பது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது; பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா். சென்னைஅடையாறு ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சந்த் விஸ்வ மெளலி ஸ்ரீ தியானேஸ்வா் மகாராஜின் 750... மேலும் பார்க்க