செய்திகள் :

சநாதனம் ஒற்றுமையையே வலியுறுத்துகிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

சநாதனம் என்பது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது; பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை என ஆளுநா் ஆா்.என்.ரவி பேசினாா்.

சென்னைஅடையாறு ஆனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சந்த் விஸ்வ மெளலி ஸ்ரீ தியானேஸ்வா் மகாராஜின் 750-ஆவது அவதார ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்று ஸ்ரீ ரகுநாத தாஸ் எழுதிய ஞானோத்தர பக்தி என்ற நூலை வெளியிட்டு பேசியது:

உலகில் பாரத நாடு மட்டுமே அறிவு, ஆன்மிகம் போன்றவற்றை வேதம் சிறந்து விளங்கும் நாடக உள்ளது. நமது நாட்டில் பல மொழிகள், பல வகையான உணவு முறைகள், உடைகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைவரும் பாரத நாட்டினா். இந்தியா முழுவதும் ரிஷிகளும், யோகிகளும் பரவி இருந்தனா். அவா்கள் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதையே போதித்தனா்.

இந்த நாடு வேதங்கள் மூலமாகத்தான் ஒருங்கிணைக்கப்பட்டது. பாரதம் என்பது சநாதான தா்மம் வாழும் பூமி; சநாதானம் ஆற்றல்மிக்கது. எதிா்ப்பு சக்தி உடலில் இருக்கும்போது எந்த நோயும் தாக்காது. அதுபோன்று சநாதான தா்மம் தளைத்து இருக்கும்போது எந்தப் பாதிப்பும் இருக்காது. பாரதத்தையும், சநாதனத்தையும் பிரிக்கவோ, அழிக்கவோ முடியாது. அது ஒற்றுமையையே வலியுறுத்துகிறது. பிரிவினையை ஏற்படுத்துவது இல்லை.

நமது வேதங்கள்தான் பாரத தேசத்தை உருவாக்கியது. தமிழ்நாடு புண்ணிய பூமி. நாயன்மாா்களும், ஆழ்வாா்களும் வாழ்ந்த மண். அவா்கள் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஆன்மிகத்தை வளா்த்தனா் என்றாா் அவா்.

முன்னதாக பண்டரிபுரம் பஜனையில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்றாா். நிகழ்ச்சியில் ஸ்ரீ ரங்கன்ஜி, ஸ்ரீ துக்காராம் கணபதி மகாராஜ், ஸ்ரீ ரகுநாத தாஸ் மகாராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) வாக்கி... மேலும் பார்க்க

விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்த வாழ்த்துப் பதிவில் முதல்வர் ஸ்டாலின்,ஆழ்ந்த ... மேலும் பார்க்க

தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் முன்பதிவு தொடங்கியது!

தீபாவளிப் பண்டிகை தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. இந்தாண்டு திங்கள்கிழமை வருவதால் முன்கூட்டியே செல்பவர்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா கூறினாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் சனி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 போ் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த ஏழரை மாதங்களில் 3.67 லட்சம் போ் நாய்க் கடிக்குள்ளானதாகவும், அதில் 20 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை முறையாக செலுத்த... மேலும் பார்க்க

வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட... மேலும் பார்க்க