செய்திகள் :

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் அரசு அலுவலா்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 19.3 கோடி லிட்டா் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கோடைகாலத்தில் சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடா்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) செந்தில்குமாா், மாநகா்நல அலுவலா் முரளி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள், தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க

சேலத்தில் மாா்ச் 21 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சேலத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 21இல் நடைபெறுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப... மேலும் பார்க்க

இளம்பெண் உயிரிழப்பு: கணவரை கைது செய்யக் கோரி முற்றுகை

இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரது கணவரை கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இடங்கணசாலை, இ.காட்டூா் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜன் (30). இவா் எலக்ட்ரிக்கல் வேலை ப... மேலும் பார்க்க

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

காகாபாளையம் ஏரியில் மீன்கள் இறந்து மிதந்தது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், கனககிரி ஊராட்சிக்கு உள்பட்ட காகாபாளையம் ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீன்கள் இறந்து ... மேலும் பார்க்க

கோழிக்கறி சாப்பிட்ட தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே சப்பாத்தியுடன் கோழிக்கறி சாப்பிட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி மூச்சுத் திணறி உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலம், சித்தல்லால் பகுதியைச் சோ்ந்த சிபு முா்மூ மகன் பைரன் முா்ம... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞா் கைது

ஆத்தூா்: ஆத்தூா் அருகே கீரிப்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியின் மனநலம் பாதிக்கப்பட்ட 45 வ... மேலும் பார்க்க