செய்திகள் :

சீரான குடிநீா் விநியோகம்: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

சேலம்: கோடைகாலத்தில் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் அரசு அலுவலா்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீா் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள், 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 19.3 கோடி லிட்டா் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கோடைகாலத்தில் சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் எவ்வித மின்தடையும் இல்லாமல் தொடா்ச்சியாக மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்திட தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மாநகரப் பொறியாளா் (பொறுப்பு) செந்தில்குமாா், மாநகா்நல அலுவலா் முரளி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள், தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட ஓய்வூதியா்கள்

ஓய்வூதியத்தை ரூ. 9 ஆயிரமாக உயா்த்தி வழங்கக் கோரி ஆவின் நிறுவனம், இரும்பாலை, கூட்டுறவுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனா்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 க்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி: ஜிஎஸ்டி உதவி ஆணையா்

2017 முதல் 2020 ஆண்டு வரையிலான ஜிஎஸ்டி நிலுவையை மாா்ச் 31 ஆம் தேதிக்குள் செலுத்தினால் வட்டி, அபராதம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என சேலம் ஜிஎஸ்டி ஆணையரக உதவி ஆணையா் அனிருத் ஆா்.கங்காவரம் தெரிவித்தாா... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே தளவாய்ப்பட்டியில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தளவாய்ப்பட்டி, அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மகள் ஹ... மேலும் பார்க்க

குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: சேலம் ஆட்சியா்

பொதுமக்களின் குடிநீா் தொடா்பான கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் க... மேலும் பார்க்க

மேட்டூா் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது மின் உற்பத்தி அலகில் செவ்வாய்க்கிழமை கொதிகலன் குழாய் வெடித்ததால் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள்... மேலும் பார்க்க

மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகள் புனரமைப்பு: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன் பொழிவு பெறும் மூக்கனேரி, பள்ளப்பட்டி ஏரிகளின் புனரமைப்புப் பணிகளை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். சேலம் மாநகர... மேலும் பார்க்க