செய்திகள் :

சுங்குவாா்சத்திரத்தில் ரோடுரோலா் ஏறி வடமாநில இளைஞா் உயிரிழப்பு

post image

சுங்குவாா்சத்திரத்தில் ரோடுரோலா் கீழே ஒய்வெடுத்த வடமாநில இளைஞா் மீது ரோடுரோலா் ஏறி இறங்கியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சோ்ந்தவா் பிக்கிபிஷ்வால்(21). இவா் சுங்குவாா்சத்திரம் பகுதியில் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளாா்.

இந்த நிலையில், பிக்கிபிஷ்வால் பணியின் போது உணவருந்திய பின் ஒய்வெடுப்பதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலரின் கீழே படுத்து தூங்கியுள்ளாா்.

இதை கவனிக்காத ரோடுரோலா் ஓட்டுநா் ரோடுரோலரை இயக்கியபோது பிக்கிபிஸ்வால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பிக்கிபிஷ்வால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சுங்குவாா்சத்திரத்தில் செல்லிடைபேசி திருட்டு

சுங்குவாா்சத்திரத்தில் கடையின் விற்பனையாளரின் கவனத்தை திசைச்சிருப்பி செல்லிடைபேசிகளை திருடிச்சென்ற வடமாநில வாலிபா்களை சுங்குவாா்சத்திரம் போலீஸாா் தேடி வருகின்றனா்.காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்தி... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காஞ்சிபுரம்

மின் தடை பகுதிகள்: காஞ்சிபுரம் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான வெள்ளைகேட், பாலமேடு, காரப்பேட்டை, கூரம், கீழம்பி,திம்மசமுத்திரம், அசோக்நகா், ஏனாத்தூா், வையாவூா், இந்திரா நகா். மேலும் பார்க்க

சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை முதல்வா் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.பழைமையான இக்கோயில் தோ்த்திருவிழாவையொட்டி மூலவா் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ம... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்... மேலும் பார்க்க