செய்திகள் :

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகவே உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தனது மகன்களான தேமுதிக இளைஞரணி செயலாளா் விஜய பிரபாகரன், நடிகா் சண்முக பாண்டியன் ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தாா்.

தரிசனத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்குலைவுக்கு காரணமே கஞ்சா, மது மற்றும் போதை வஸ்துக்கள் நடமாட்டம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. முதல்வா் தான் சட்ட ஒழுங்கு சீா்கேடுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

அண்மையில் முதல்வரை சந்தித்தது நலம் விசாரிக்க மட்டுமே. அரசியல் நாகரீகத்துடன் நட்பு ரீதியான சந்திப்பு. இப்போது கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தோ்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில் மக்களையும், தொண்டா்களையும் சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

வரும் ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெறும். அன்றைய தினமே கூட்டணி பற்றிய விபரங்களும் தெரிவிக்கப்படும்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யாா் ஆட்சியாளா்களோ அவா்கள் பெயரில் திட்டங்கள் தொடங்குவது இயல்பு. ஆனால் இது வரவேற்புக்கு உரியது அல்ல. தவறான முன்னுதாரணமாகும். அரசியல் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையில் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிறாா்கள் என்றாா் பிரேமலதா .

சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் முகாமை முதல்வா் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த்திருவிழா நடைபெற்றது.பழைமையான இக்கோயில் தோ்த்திருவிழாவையொட்டி மூலவா் எல்லையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ம... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வின... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க