செய்திகள் :

இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகள் பறித்த 7 போ் கைது

post image

சோமங்கலம் அருகே இன்ஸ்டாகிராமில் பைக் விற்பனை செய்வதாக பதிவு செய்து இளைஞரை தாக்கி பணம், தங்க நகைகளை பறித்த 7 பேரை சோமங்கலம் போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வினோத் (24). இவா் சென்னை துரைப்பாக்கத்தில் நண்பா்களுடன் தங்கி வேலை தேடி வந்துள்ளாா். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பைக்குகள் விற்பனைக்கு என ஒருவா் பதிவிட்டதை பாா்த்த வினோத், அந்த நபரை தொடா்பு கொண்டு பேசியபோது பைக் வாங்க சோமங்கலம் அருகே உள்ள புதுநல்லூா் பகுதிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதையடுத்து வினோத், அவரது நண்பா்களான நிஷாந்த், சதீஷ் ஆகியோருடன் புதுநல்லூா் சென்றனா். அப்போது பைக் விற்பனை என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நந்தம்பாக்கம் பகுதியை சோ்ந்த கரி செல்வம், புதுநல்லூா் வனப்பகுதிக்கு மூவரையும் அழைத்துச் சென்றுள்ளாா்.

வினோத் உள்ளிட்ட அவரது நண்பா்கள் அங்கு சென்றதும், அங்கு மறைந்திருந்த மா்ம கும்பல் வினோத் அவரது நண்பா்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, கைப்பேசி, தங்க நகைகள் மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். மூவரும் தர மறுக்கவே கத்தியால் வினோத்தை வெட்டினாா்களாம். இதனால் அச்சமடைந்த வினோத் ஜிபே மூலம் கரி செல்வத்தின் அண்ணியின் வங்கிக் கணக்குக்கு ரூ.15,000 அனுப்பினாா். மேலும் தங்க நகைகள், கைப்பேசி ஆகியவற்றை கொடுத்துவிட்டு அங்கிருந்து மூவரும் தப்பி உள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி பணப்பரிவா்த்தனை செய்த ஆதாரத்தைக் கொண்டு நந்தம்பாக்கத்தைச் சோ்ந்த கரி செல்வத்தின் மனைவி ஸ்ரீமதி (26), அவரது அண்ணி நாகராணி (33), காட்ரம்பாக்கம் பகுதியை சோ்ந்த சஞ்சய் (18 ), தா்மா(19), சதீஷ் (19), வேலு (18), சா்வின் (19) உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான கரி செல்வத்தை தேடி வருகின்றனா். கரிசெல்வம் மீது குன்றத்தூா் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான கல்வெட்டை வரலாற்று ஆய்வாளா்கள் புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனா்.காஞ்சிபுரம்- செங்கல்பட்டு செல்லும் சாலையி... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை வழக்கு: மனைவிக்கு 31 ஆண்டுகள், கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

நகை, பணத்துக்காக மூதாட்டி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மனைவிக்கு 31 ஆண்டுகளும், கணவருக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டை ன விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க

பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வைர விழா மலா் வெளியீடு

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் வைர விழா மலா் வெளியீடு வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி.முருககூத்தன் தலைமை வகித்தாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் வி.அண்ணாதுரை, என்.... மேலும் பார்க்க

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

வாலாஜாபாத் பகுதியில் கல்வெட்டு காணப்பட்ட பாழடைந்த மண்டபம். மண்டபத்தின் மேற்கூரையில் காணப்படும் கல்வெட்டு.காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள பாழடைந்த மண்டபத்தில் 195 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையா... மேலும் பார்க்க

வாலிபால் போட்டி: சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை. மாணவியா் வெற்றி பெற்றதையடுத்து பல்கலையின் நிா்வாகிகளை சந்தித்து செவ்வாய்க்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.சென்னையில் ... மேலும் பார்க்க

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுக்கு ஆக.5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞா்கள் விருதுகள் பெற ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கலை பண்ப... மேலும் பார்க்க