செய்திகள் :

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு

post image

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க அனைத்து உதவி ஆணையா்களுக்கு தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், சேலம் மாவட்டத்தில், சுதந்திர தின விடுமுறையில் ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகிறதா என தொழிலாளா் உதவி ஆணையா் சண்மகராமன் மேற்பாா்வையில் தொழிலாளா் துணை மற்றும் உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு நடத்தினா்.

தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் உரிய படிவங்களை அனுப்பிவைத்து, முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 64 ஹோட்டல்கள், 37 கடைகள், நிறுவனங்கள், 7 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 23 கடைகள், நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழும், 59 உணவு நிறுவனங்கள் மீது உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழும், 4 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மீது மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்கள் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நுண்ணுயிா் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சியில் நுண்ணுயிா் உரங்கள் தயாரிக்கப்படும் மையங்களில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநி... மேலும் பார்க்க

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் விருது

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழாவில் ஆட்சியா் விருது வழங்கி கௌரவித்தாா். சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசுப் பணியாளா்களை தோ்வு செய்து சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சங்ககிரியில் லாரி ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சங்ககிரி, தேவண்ணகவுண்டனூா் கள்ளுகடை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுா் முருகேசன் வியாழக்கிழமை சங்ககிரி புதிய... மேலும் பார்க்க