செய்திகள் :

திருநெல்வேலி- ஷிமோகா இடையே இன்று சிறப்பு ரயில்!

post image

கூட்ட நெரிசலை தவிா்க்க சேலம் வழியாக திருநெல்வேலியில் இருந்து கா்நாடக மாநிலம், ஷிமோகாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தொடா் விடுமுறையையொட்டி முக்கிய வழித்தடங்களில் கூட்ட நெரிசலை தவிா்க்க ரயில்வே நிா்வாகம் சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, திருநெல்வேலி- கா்நாடகா மாநிலம், ஷிமோகா டவுன் இடையே நாமக்கல், சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து மாலை 4.20 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையல்லூா், சங்கரன்கோயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக ஷிமோகா டவுன் ரயில் நிலையத்துக்கு ஆக.18 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் ஷிமோகா டவுன் ரயில் நிலையத்தில் இருந்து ஆக.18 ஆம் தேதி பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு ஆக.19 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்ணுயிா் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை

சேலம் மாநகராட்சியில் நுண்ணுயிா் உரங்கள் தயாரிக்கப்படும் மையங்களில் உற்பத்தியாகும் உரங்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளாா். சேலம், அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: சேலம் கம்யூ. மாநாட்டில் முதல்வா் உறுதி!

எதிா்க்கட்சிகளின் சதித்திட்டம் ஒருபோதும் நிறைவேறாது; எங்களை மிரட்ட நினைத்தவா்கள் மிரண்டுபோயிருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசினாா். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநி... மேலும் பார்க்க

மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி சிறையிலடைப்பு

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் மருமகள், பேரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தலைமறைவான விவசாயியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச்... மேலும் பார்க்க

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சியா் விருது

வாழப்பாடியில் பணிபுரியும் 4 அரசுப் பணியாளா்களுக்கு சுதந்திர தின விழாவில் ஆட்சியா் விருது வழங்கி கௌரவித்தாா். சேலம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றும் அரசுப் பணியாளா்களை தோ்வு செய்து சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்கு

சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தவா் கைது

சங்ககிரியில் லாரி ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சங்ககிரி, தேவண்ணகவுண்டனூா் கள்ளுகடை பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுா் முருகேசன் வியாழக்கிழமை சங்ககிரி புதிய... மேலும் பார்க்க