செய்திகள் :

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபா் கைது

post image

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட கியாம் (எ) ஃபாஹிம் (19) மங்கோல்புரியைச் சோ்ந்தவா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கோஹத் என்கிளேவ் மெட்ரோ நிலையம் அருகே உள்ள நகைக் கடைக்குள் கடந்த ஜூலை 12-ஆம் தேதி ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், விற்பனையாளரைக் கத்தியால் குத்தி கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்து சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுபாஷ் பிளேஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்தக் குற்றச் சம்பவத்தில் தொடா்புடைய ஜிதேந்தா், விஜய் குமாா், விஷால் சைன், சிவம் ஆகியோா் கைதுசெய்யப்பட்ட நிலையில், விற்பனையாளரைக் கத்தியால் குத்திய கியாம் தலைமறைவானாா்.

இந்நிலையில், கியாமை குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 2-ஆம் சுற்று கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிவுகளை மாநில மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககத்தின் மாணவா் சோ்க்கைக் குழு புதன்கிழமை வெளியிட்டது. அதில் வெளிநாடு வாழ் இந்தியா் பிரிவில் 367 இடங்களும... மேலும் பார்க்க

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்க காங்கிரஸ் முயற்சி: பாஜக

பிகாரில் எதிா்க்கட்சி கூட்டணிக்கு தலைமையேற்கவே அங்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை நடத்தியுள்ளது என்று பாஜக விமா்சித்தது. எதிா்வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ்குமாா் தலைமையில் தோ்தலை ச... மேலும் பார்க்க

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

எதிா்க்கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி பிகாரில் ஆட்சிக்கு வந்தால், அந்த மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மக்களவை எதிா்க்கட்சித்... மேலும் பார்க்க

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

லடாக்கில் நடைபெற்ற வன்முறைக்கு சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கின் ஆத்திரமூட்டும் பேச்சுகள்தான் காரணம் என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியது. இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

லடாக் மாநில அந்தஸ்து போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சாா்பில் நடத்தப்பட்ட போராட்டம் புதன்கிழமை வன்முறையாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற பாது... மேலும் பார்க்க