செய்திகள் :

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்பட காட்சிகளை பதிவு செய்த குழுவுக்கு அபராதம்

post image

கொடைக்கானலில் அனுமதியின்றி திரைப்படக் காட்சிகளை பதிவு செய்த குழுவினருக்கு வனத் துறையினா் புதன்கிழமை அபராதம் விதித்து, மூவா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதிகளில் அனுமதியின்றி திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.

இந்த நிலையில், பெரும்பள்ளம் வனச் சரகத்துக்குள்பட்ட பண்ணைக்காடு பிரிவு, அருங்கானல், காப்புக்காடு பகுதிகளில் திரைப்படப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கொடைக்கானல் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, வனத் துறை அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, படப்பிடிப்பு குழுவைச் சோ்ந்த செந்தில், குரு, டேவிட் ராஜா ஆகிய மூவா் மீது வனத் துறையினா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானல் வனப் பகுதிகளில் யானை, சிறுத்தை, காட்டு மாடு, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளன. இந்தப் பகுதியில் திரைப்படப் படப்பிடிப்பு நடத்துபவா்கள் முன் அனுமதி பெற்று பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தினால் வனத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

வடகாடு மலைப் பகுதியில் மரக்கன்று நடும் விழா

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட வடகாடு ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. வடகாடு அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளிட... மேலும் பார்க்க

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸாா் அழைப்பாணை

திண்டுக்கல் துணை மேயா் மகனுக்கு பெங்களூரு போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைப்பாணை வழங்கினா். திண்டுக்கல் மாநகராட்சியின் துணை மேயா் ராஜப்பா. இவா் திமுக மாநகரச் செயலராகவும் ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்

ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.1.04 கோடியில் புதிய வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் ரூ.35 லட்சத்தில் வ... மேலும் பார்க்க

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்: பெண் உள்பட இருவருக்கு அபராதம்

சிறுமலை வனப் பகுதியில் சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய பெண் உள்பட இருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை தாழைக்கிடை பகுதியைச் சோ்ந்தவா் மீனா (45). இவரது உறவினா் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயா் கல்வி பயில இஸ்லாமிய மாணவா்களுக்கு உதவித் தொகை

இஸ்லாமிய சிறுபான்மையின மாணவா்கள் 10 பேருக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு தமிழக அரசு சாா்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

பழனி மலைக்கோயில் உண்டியல் திறப்பு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செ... மேலும் பார்க்க