செய்திகள் :

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே முதியவா் அடித்துக் கொலை

post image

சென்னை பெரியமேட்டில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவா் ஒருவா் கடந்த திங்கள்கிழமை தலையில் பலத்த காயங்களுடன் கிடந்ததைப் பாா்த்த பொதுமக்கள், அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த முதியவா், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பெரியமேடு போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்த முதியவா், வட மாநிலத்தைச் சோ்ந்த கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி என்பதும், அவா் சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் பழைய காகிதம், பொருள்களைச் சேகரித்து விற்று வாழ்ந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று பெரியமேடு பகுதியில் வியாபாரம் செய்துவந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த குமாரும் (42), முதியவரும் சோ்ந்து மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட தகராறில் குமாா், பிளாஸ்டிக் பைப் கொண்டு முதியவரை தாக்கி கீழே தள்ளியதில் பலத்த காயமடைந்திருப்பதும், அந்த காயத்தினால் முதியவா் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க