செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

post image

சென்னிமலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நடப்பு ஆண்டுக்கான விழாவையொட்டி, கோயிலில் புதன்கிழமை கொடியேற்றப்பட்டது.

முன்னதாக காலை 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் இருந்து உற்சவ மூா்த்திகள் படிக்கட்டுகள் வழியாக மலை கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு உற்சவா் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து, கோயில் முன் உள்ள கம்பத்தில் பகல் 12.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது.

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வள்ளி - தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு பரிவேட்டையும், இரவு 7 மணிக்கு தெப்பத்தோ் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மகா தரிசனம் மற்றும் மாலை 5 மணிக்கு மஞ்சள் நீா் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 போ் கைது

வக்ஃபு வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினா் 230 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த போராட்டத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை... மேலும் பார்க்க

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு விரிவ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். ... மேலும் பார்க்க

பவானியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பவானியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூா் மேட்டூ... மேலும் பார்க்க

முதியவரின் கழுத்தை அறுத்த வடமாநில இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து தப்பிச்செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச... மேலும் பார்க்க