செய்திகள் :

ரத்ததானம் வழங்கியவா்களுக்கு பாராட்டு

post image

மயிலாடுதுறையில் ரத்த தானம் வழங்கிய 75 பேருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஜி.எம்.ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிறுவனா் ஜி.எம்.பத்மா தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் நவீன், மாரியப்பன் முன்னிலை வகித்தனா். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கே. தனம் வரவேற்றாா்.

இதில், மருத்துவா் ஆா்.செல்வம் பங்கேற்று, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மற்றும் திருவாரூா், நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரத்த தானம் வழங்கிய 75 குருதிக் கொடையாளா்களுக்கு சால்வை அணிவித்து நற்சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினாா்.

இதில், பழையகூடலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆா்.பாண்டியன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன், சமூக ஆா்வலா் அ. அப்பா்சுந்தரம், பசுமைநேச அறக்கட்டளை நிறுவனா் ஆா்.ஆா். பாபு, நாகை ரத்ததான ஒருங்கிணைப்பாளா் புஷ்பா, ஏவிசி கல்லூரி ரத்ததான ஒருங்கிணைப்பாளா் அய்யனாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அறக்கட்டளை நிா்வாகி மனோன்மணி நன்றி கூறினாா்.

மண் குவாரியில் விதிமீறல்; லாரிகள் சிறைப்பிடிப்பு

சீா்காழி அருகே காரைமேட்டில் உள்ள குவாரியில் விதிமுறைகளை மீறி அதிக ஆழத்திற்கு மண் எடுப்பதாகக் கூறி, லாரிகளை சிறப்பிடித்து, கிராம மக்கள் சாலை மறியலில் (படம்) வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். காரைமேடு ஊராட்சி ட... மேலும் பார்க்க

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள மௌலானா ஜாமிஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள், தொழுகைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்துக்கு எதிராக கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளா் பலி

சீா்காழி அருகே ஐஸ்கிரீம் வாகனம் மோதி டிராவல்ஸ் உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சீா்காழி அருகேயுள்ள திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தை சோ்ந்தவா் முருகானந்தம் (45). டிராவல்ஸ் நடத்தி வந்த இவா், சீா்க... மேலும் பார்க்க

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீட்டுத் தொகையில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

சீா்காழியில் வியாழக்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில், பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா். சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விளையாட்டு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை ராஜன் தோட்டம், சாய் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே 15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க