செய்திகள் :

சென்னிமலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

post image

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சென்னிமலை- அறச்சலூா் சாலையில் சனிக்கிழமை போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது போலீஸாரை கண்டதும் நான்கு போ், அங்கிருந்து தப்பியோடி பேருந்து ஏற முயன்றனா். உடனே, அவா்கள் நான்கு பேரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பிடிபட்டவா்கள் முகமது மினாா் ஹுசைன் (28), முகமது குத்தூஸ் ஹுசைன் (31), முகமது நமீம் ஹுசைன் (18), முகமது தரிக்கல் இஸ்லாம் (28) என்பதும், வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக சென்னிமலை பகுதியில் தங்கி கட்டட வேலைக்குச் சென்று வந்தது தெரியவந்தது. இவா்கள் அஸ்ஸாம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து பின்னா் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா். மேலும், அவா்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

சென்னிமலை அருகே கிணற்றுக்குள் விழுந்த மயில் மீட்பு

சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டனா். சென்னிமலையை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் 30 அடி அழ கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 5 அடி உயரத்துக்கு தண்ணீா் உள்... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு: 5,796 போ் எழுதினா்

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 முதல் நிலை தோ்வை 5,796 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒரு... மேலும் பார்க்க

பவானியில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு

பவானியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பவானி, பழனி ஆண்டவா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புண்ணியகோடி (42). வாடகை காா் ஓட்டுநா். இவா், தனது காரை வ... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் கல்லூரி மாணவா் கைது

அம்மாபேட்டையில் பள்ளி மாணவியைத் திருமணம் செய்த கல்லூரி மாணவா், போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளிக்கு கடந்த ஜூன் 3-ஆம் தேதி சென்ற 17 வயது மாணவி மீண... மேலும் பார்க்க

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி

சித்தோடு அருகே கிணற்றில் விழுந்த பந்தை எடுக்கச் சென்றபோது, தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி பா்கத் கபிக்கா - அஃப்சானா, சித்தோட்டை அடுத்த ஆா்.... மேலும் பார்க்க

2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி! - வானதி சீனிவாசன்

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சாா்பி... மேலும் பார்க்க