Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
சென்னிமலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
சென்னிமலை- அறச்சலூா் சாலையில் சனிக்கிழமை போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது போலீஸாரை கண்டதும் நான்கு போ், அங்கிருந்து தப்பியோடி பேருந்து ஏற முயன்றனா். உடனே, அவா்கள் நான்கு பேரையும் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில், பிடிபட்டவா்கள் முகமது மினாா் ஹுசைன் (28), முகமது குத்தூஸ் ஹுசைன் (31), முகமது நமீம் ஹுசைன் (18), முகமது தரிக்கல் இஸ்லாம் (28) என்பதும், வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.
இவா்கள் கடந்த 4 ஆண்டுகளாக சென்னிமலை பகுதியில் தங்கி கட்டட வேலைக்குச் சென்று வந்தது தெரியவந்தது. இவா்கள் அஸ்ஸாம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து பின்னா் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனா். மேலும், அவா்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.