செய்திகள் :

சென்னை: ஆன்லைன் ஆர்டர்; டெலிவரி பாய் செயலால் அதிர்ச்சியடைந்த பெண் - நடந்தது என்ன?

post image

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய பெண் ஒருவர், அவரின் வீட்டில் குளித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய இளைஞர் ஒருவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீட்டின் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதனால் வீட்டை சுற்றிப்பார்த்தபோது பெண் ஒருவர், குளித்துக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறார் அந்த இளைஞர். உடனே சபலமடைந்த அவர், தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக எடுத்திருக்கிறார். இந்தச் சமயத்தில் தான் குளிப்பதை இளைஞர் வீடியோ எடுப்பதைக் கவனித்த பெண், சத்தம் போட்டிருக்கறார். உடனே அந்த இளைஞர், தான் டெலிவரி செய்ய வந்த பொருளை அங்கேயே விட்டுவிட்டு தன்னுடைய பைக்கில் தப்பி ஓடிவிட்டார்.

டெலிவரி பாய் சதீஷ்குமார்

இதையடுத்து அந்தப் பெண் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி டெலிவரி செய்ய வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சதீஷ்குமார் எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் பெண், குளிக்கும் வீடியோ பதிவாகியிருந்தது. இதையடுத்து சதீஷ்குமார் (36) மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரின் செல்போன், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சதீஷ்குமார், வேளச்சேரியில் குடியிருந்து வருகிறார். விசாரணைக்குப்பிறகு அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`டிரஸ் போட மாட்டேன்’ - போலீஸ்காரரின் நிர்வாண அட்டூழியம்... வேலூரில் நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் இருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று... நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது.கே.வி.குப்பம் அருகிலுள்ள நீலகண்டபாளையம் பகுதியைச் சேர்ந்த சேட்டு என... மேலும் பார்க்க

Bengaluru : பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி - காவலரால் மீண்டும் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

'வேலியே பயிரை மேய்ந்தாற் போல' என்ற பழமொழியை போன்ற சம்பவம் ஒன்று பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் விக்கி என்பவர் நண்பரை போன்று பழகி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து... மேலும் பார்க்க

திருவெண்ணைநல்லூர்: டிராக்டர் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்... பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூருக்கு உட்பட்டது ஆணைவாரி ரயில் போக்குவரத்து நிலையம். இங்கு ஆணைவாரி மற்றும் ஆத்திப்பட்டு ஆகிய கிராமங்களை இணைக்கும் ரயில்வே கேட் அமைந்துள்ளது. கடலூர் டு சித்தூர் சால... மேலும் பார்க்க

`கோடி கோடியாக சொத்து' சிக்கலில் குடும்பத்தினர்? - கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் ரெய்டு பின்னணி

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் அம்மன் அர்ஜூனன். இவர் அதிமுகவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த 2016-2021 காலகட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நில... மேலும் பார்க்க

MP: "மணமான பெண்களைத் திருமண ஆசைகாட்டி பாலியல் உறவு வைப்பது..." - மத்தியப் பிரதேச நீதிமன்றம் அதிரடி

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் உள்ள சதர்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர யாதவ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார். இருவரும் தனிமையில் மகிழ்ச்ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு - திமுகவினர் மீது வழக்கு

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “எங்களுக்கு மும்மொழி கொள்கை தேவையில்லை இருமொழி கொள்கை தான் எங்களின் கொள்கை.” என்று திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் க... மேலும் பார்க்க