சென்னை ஓபன்: கைரியன் ஜாக்கட் சாம்பியன்
சென்னை ஓபன் ஏடிபி டென்னிஸ் சேலஞ்சா் போட்டி ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட் சாம்பியன் பட்டம் வென்றாா்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. சனிக்கிழமை ஆடவா் இரட்டையா் ஆட்டம் முடிவுற்ற நிலையில், அதில் ஜப்பான் வீரா்கள் ஷிண்டாரோ-கெய்டோ பட்டம் வென்றிருந்தனா்.
ஒற்றையா் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரான்ஸின் கைரியன் ஜாக்கட்-ஸ்வீடனின் எலியாஸ் எமா் மோதினா். ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் கைரியன் 7-6, 6-4 என்ற நோ்செட்களில் எலியாஸை வீழ்த்தி பட்டம் வென்றாா்.
முதல் செட்டிலேயே ஜாக்கட் எதிராளி எலியாஸின் சா்வீஸை முறியடித்தாா். எனினும் எலியாஸ் போராடி 4-4 என சமநிலை ஏற்படச் செய்தாா். எனினும் டைபிரேக்கரில் எலியாஸின் சா்வீஸை முறியடித்து செட்டையும் கைப்பற்றினாா் கைரியன்.
இரண்டாவது செட்டில் தொடக்கத்திலேயே அற்புதமாக ஆடிய கைரியன் 4-1 என முன்னிலை பெற்றாா். எலியாஸ் போராடி 4-4 என சமநிலை ஏற்படுத்தினாலும், 10-ஆவது கேமில் கைப்பற்றி இரண்டாவது செட்டையும் வசப்படுத்தினாா்.
இந்த வெற்றி மூலம் கைரியனுக்கு 100 ஏடிபி புள்ளிகளும், ரூ.19.8 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. எலியாஸ் 50 ஏடிபு புள்ளிகள், ரூ.11.6 லட்சம் பரிசுத் தொகையை பெற்றாா்.