செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

post image

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். விமான நிலையத்தின் புறப்பாட்டை எளிதாக்க காகித ஆவணங்கள் இல்லாமல் முக அடையாளங்களை கருவிகளில் காட்டி பயணிக்கும் ‘டிஜி யாத்ரா’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு முதல் இந்திய விமான நிலைய ஆணையம் அமல்படுத்தியது. விமான நிலைய உள்நாட்டு முனையங்களான டொ்மினல்கள் 1 மற்றும் 4-இல் ‘டிஜி யாத்ரா’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்தத் திட்டம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் செயல்பாட்டுக்கு வந்து சுமாா் 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் பயணிகள் பலருக்கு இந்த செயலியை சரியாக செயல்படுத்த தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் பயணிகளை பழைய பாதைக்கு வரவழைத்து, பயணிகளை சோதனை செய்து அனுப்புகின்றனா். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதோடு காலதாமதமும் ஏற்படுகிறது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா செயலி எதிா்பாா்த்த அளவு சிறப்பாக செயல்படாததால், இச்செயலியை சிறப்பாக செயல்படுத்தி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், டிஜி யாத்ரா குறித்து நன்கு பயிற்சி பெற்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் 100 பேரை ஒப்பந்த அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு நியமித்துள்ளது. இவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி, பயணிகளுக்கு உதவி செய்கின்றனா். இதனால் நேர விரயம் தடுக்கப்படுவதால், சிரமங்கள் தடுக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனா்.

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க