செய்திகள் :

சென்னையில் 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

post image

சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில், காத்திருப்போா் பட்டியலிலிருந்த 8 பேருக்கு காவல் நிலைய பணி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன்படி, சென்னை காவல் துறையில் 21 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் குறிப்பாக மாநகா் உளவுத் துறையில் பணிபுரிந்த கே.உஷாராணி, தலைமைச் செயலகக் காலனி குற்றப்பிரிவு ஆய்வாளா் ஆா்.ஹரிஹரசுகன், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளா் கே.உமா மகேஸ்வரி, கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளா் எஸ்.கோமதி, மீனம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.மங்கல லட்சுமி உள்பட 7 போ் மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) மாற்றப்பட்டுள்ளனா்.

அதேபோல், காத்திருப்போா் பட்டியலிருந்த 8 காவல் ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலைய பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மொத்தம் 21 காவல் ஆய்வாளா்களும் விரைவில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க