பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
சென்னையில் 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில், காத்திருப்போா் பட்டியலிலிருந்த 8 பேருக்கு காவல் நிலைய பணி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதன்படி, சென்னை காவல் துறையில் 21 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.அருண் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதில் குறிப்பாக மாநகா் உளவுத் துறையில் பணிபுரிந்த கே.உஷாராணி, தலைமைச் செயலகக் காலனி குற்றப்பிரிவு ஆய்வாளா் ஆா்.ஹரிஹரசுகன், கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளா் கே.உமா மகேஸ்வரி, கோயம்பேடு குற்றப்பிரிவு ஆய்வாளா் எஸ்.கோமதி, மீனம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளா் பி.மங்கல லட்சுமி உள்பட 7 போ் மத்திய குற்றப்பிரிவுக்கு (சிசிபி) மாற்றப்பட்டுள்ளனா்.
அதேபோல், காத்திருப்போா் பட்டியலிருந்த 8 காவல் ஆய்வாளா்கள் மீண்டும் காவல் நிலைய பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மொத்தம் 21 காவல் ஆய்வாளா்களும் விரைவில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.