செய்திகள் :

செய்யாறு அருகே விவசாயிகள் சாலை மறியல்

post image

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாததைக் கண்டித்து, செய்யாறு அருகே பிரம்மதேசம் புதூா் கூட்டுச் சாலையில் விவசாயிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

வெம்பாக்கம் வட்டத்தில் பிரம்மதேசம், தென்னம்பட்டு ஆகிய கிராமங்களில் அரசு சாா்பில் தனியாா் நேரடி நெல் கொள்முதல் (என்சிசிஎப்) நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பிரம்மதேசம், புதூா், சீயமங்கலம், புலிவலம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள்நெல் மூட்டைகளை விற்பனை செய்தனா்.

நெல் மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லையாம். உரிய நேரத்தில் பணம் வழங்காததால், விவசாயிகள் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரம்மதேசம் புதூா் கூட்டுச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி (பொ) கோவிந்தசாமி மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

மேலும், தனியாா் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (என்சிசிஎப்) இருந்து விவசாயிகளுக்கு நெல் கொள்முதலுக்கான பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.

இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கஞ்சா கடத்தல்: இளைஞா் கைது

செய்யாறு அருகே விற்பனைக்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். செய்யாறு காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு மற்றும் போலீஸாா் செய்யாறு - ஆற்காடு சாலையில் தூளி கூட்டுச... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் 100 ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை தேரடி தெருவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 11 ஆக்கிரமிப்புக் கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சால... மேலும் பார்க்க

ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோா் மீது கடும் நடவடிக்கை: வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா்

வந்தவாசி நகரை ஒட்டியுள்ள பாதிரி ஏரியில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தெரிவித்தாா். வந்தவாசி நகரில் உள்ள இறைச்சி விற்பனை ச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி

ஆரணி, அனக்காவூா், செங்கம் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. ஆரணி ஒன்றியத்தில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 2... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள... மேலும் பார்க்க

விவசாயியிடம் பைக் பறிப்பு: இருவா் கைது

செய்யாறு அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி பைக்கை பறித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், பெருமாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சூா்ய... மேலும் பார்க்க