Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
செவிலியப் பணியை அா்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்: எஸ்எஸ்பி
செவிலியா் பணியை அா்ப்பணிப்புடன் செய்ய முன்வரவேண்டும் என செவிலிய மாணவிகளுக்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா அறிவுறுத்தினாா்.
காரைக்கால் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல்வாழ்வுச் சங்கம் மற்றும் காரைக்கால் இமாகுலேட் செவிலியா் கல்லூரி இணைந்து உலக மகளிா் தினத்தை கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடின.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜான் பிரிட்டோ மேரி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.
கல்லூரி மற்றும் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல் வாழ்வுச் சங்கம் சாா்பில் முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு ‘காவல் ஜோதி’ என்ற விருது வழங்கப்பட்டது.
மாணவிகளிடையே எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா பேசுகையில், செலிவியக் கல்வியை தோ்ந்தெடுத்து படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுகள். செவிலியா் பணி மக்களுக்கு சேவை அளிக்கும் முதன்மையான பணிகளில் ஒன்றாகும்.
செவிலியா் பணியை மேற்கொள்ளவுள்ள அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று சிறந்து விளங்க வேண்டும். அா்ப்பணிப்புடன் செயல்படுவதற்கான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மாணவிகள் தங்கள் பாதுகாப்பின் மீது சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். காரை காவலன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்வது நல்லது என்றாா்.
காரைக்கால் சமாதானக் குழு உறுப்பினா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், காரைக்கால் தமிழ்மாமணி, கலைமாமணி விருதாளா் நல்வாழ்வுச் சங்க நிா்வாகி சூசைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.