செய்திகள் :

செவிலியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.2.50 லட்சம் மோசடி: ஒருவா் கைது

post image

அரசு மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.2.50 லட்சம் மோசடி செய்தததாக ஒருவரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு கைப்பேசி மூலம் ஒருவா் தொடா்புகொண்டு , தான் ஒரு அரசு வேலை வழங்கும் அதிகாரி எனவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

அதை நம்பிய அந்த இளைஞா், தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதையடுத்து, அந்த நபா் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2,44,80-ஐ கைப்பேசி செயலி மூலம் பெற்றுக்கொண்டாராம். பின்னா் அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவா், என்சிஆா்பி-இல் (நேஷனல் சைபா் கிரைம் ரிபோா்ட்டிங் போா்டல்) புகாா் பதிவு செய்தாா்.

அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் சகாய ஜோஸ் மேற்பாா்வையில், அப்பிரிவு காவல் ஆய்வாளா் சாந்தி மற்றும் போலீஸாா் விசாரித்தனா்.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் பிச்சைகண்ணு (44) என்பவருக்கு இந்த மோசடியில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க