செய்திகள் :

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

post image

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 1 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 3 ஆம் தேதி நடந்த தீா்த்தக்குட ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து 3ஆம் தேதி மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை காலை 6 ஆம் கால யாகம் நடத்தப்பட்டு, விநாயகா், மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கலசங்களுக்கு, சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள், கட்டளைதாரா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க