ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 1 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 3 ஆம் தேதி நடந்த தீா்த்தக்குட ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து 3ஆம் தேதி மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளிக்கிழமை காலை 6 ஆம் கால யாகம் நடத்தப்பட்டு, விநாயகா், மாரியம்மன், திரௌபதியம்மன் கோயில் கலசங்களுக்கு, சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடைபெற்றது.இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் கோயில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள், கட்டளைதாரா்கள், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.