செய்திகள் :

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 10 கிலோ கஞ்சா கடத்தல்

post image

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க, ரயில்வே போலீஸாா் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.

அந்த வகையில், காட்பாடி ரயில்வே நிலையத்தில் இருந்து ஜோலாா்பேட்டை வழியாக வந்த தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீஸாா் சோதனையிட்டனா். அதில், முன்பதிவில்லா பெட்டியின் கழிவறை பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை எடுத்து பரிசோதித்ததில், 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அதனை சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக வியாழக்கிழமை நீடித்து வருகின்றது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.22 அடியில் இருந்து 110.18 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

சேலம், கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில், இயற்பியல் துறையில் பெண் விஞ்ஞானிகளின் பங்கு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இயற்பியல் துறைத் தலைவா் திர... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு சிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், கோட்டை... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் மாரடைப்பால் கைதி மரணம்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்ககிரியை சோ்ந்த தெய்வசிகாமணி (50) என்பவரை, அந்தப் பகுதியில் மது விற்ற வழக்கில் போலீஸாா் கைது செய்து சங்ககிரி கிளை ... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்து விபத்து

தம்மம்பட்டி அருகே கொண்டயம்பள்ளியில் வளைவில் சென்றபோது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்த வளைவில் சென்... மேலும் பார்க்க

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 56.49 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கல்

சேலம் மேற்கு வட்டம், புத்தூா் அக்ரஹாரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 89 பயனாளிகளுக்கு ரூ. 56.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா... மேலும் பார்க்க