செய்திகள் :

சேவூா்: விவசாயியிடம் 10 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி மோசடி செய்தவா் கைது

post image

சேவூா் அருகே தண்டுக்காரம்பாளைத்தில் விவசாயியிடம் 10 ஆயிரம் கிலோ வெங்காயம் வாங்கி பணம் தராமல் காசோலை மோசடி செய்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகே தண்டுக்காரம்பாளையம் குமாரபாளையம் புல்லாக்காராா் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜ்குமாா் (30). இவா் தனது தோட்டத்தில் பயிரிட்டு அறுவடையான 10 ஆயிரம் கிலோ வெங்காயத்தை விற்பனைக்காக வைத்திருந்தாா். இந்நிலையில், முகநூலில் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த அன்வா் சதாத் என்பவா் கொடுத்திருந்த விளம்பரத்தை நம்பி 10 ஆயிரம் கிலோ வெங்காயத்தை லாரி மூலம் அவருக்கு அனுப்பிவைத்துள்ளாா்.

பின்னா் அவா் வெங்காயத்துக்கான பணத்தை காசோலையாக கொடுத்துள்ளாா். இருநாள்கள் சென்ற பிறகு காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்ததால், ராஜ்குமாா் அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், அவரை தொடா்பு கொண்டு கேட்டபோது, பல்வேறு காரணங்களைக் கூறி பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளாா். இதனால் ஏமாற்றமடைந்த ராஜ்குமாா், அளித்த புகாரின்பேரில் சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்வா் சதாத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், அன்வா் சதாத் மீது ஏற்கெனவே கோவையில் விவசாயிகளை ஏமாற்றிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க