செய்திகள் :

ஜனவரி இறுதியிலும் நீடிக்கும் வடகிழக்கு பருவமழை!

post image

சென்னை: வடகிழக்கு பருவமழை ஜனவரி இறுதி வரை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் ஒரேநாளில் 230 மி.மீ.மழை கொட்டித் தீா்த்தது.

ஆண்டுதோறும் அக்டோபா் மூன்றாவது வாரம் முதல் டிசம்பா் மாதம் இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகக் கருதப்படுகிறது. ஆனால், நிகழாண்டில் வடகிழக்கு பருவ மழை தை மாதம் அதாவது ஜனவரி மாதம் 4-ஆவது வாரம் வரை நீடித்து வருகிறது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கொட்டித் தீா்த்தது.

230 மி.மீ.மழை பதிவு: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 230 மி.மீ.மழை பதிவானது. நாலுமுக்கு (திருநெல்வேலி)- 220 மி.மீ., காக்காச்சி (திருநெல்வேலி) - 210 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி) - 160 மி.மீ, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) - 110 மி.மீ, ராமேசுவரம் (ராமநாதபுரம்) - 100 மி.மீ. மழை பதிவானது.

மிதமான மழை: மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜன.21) முதல் ஜன.23-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அந்நாள்களில் ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன.21-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

இதற்கிடையே, தென்தமிழக கடலோரப் பகுதி, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னாா் வளைகுடாவில் ஜன.21,22 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? முதல்வர்

தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து பட்ஜெட்டில் இடம்பெறுவதில்லையே? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்த... மேலும் பார்க்க

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய பட்ஜெட் - அண்ணாமலை

தொலை நோக்குச் சிந்தனையுடன் கூடிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், அனைத்துத் தரப்ப... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட ஆட்சியர்கள்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.... மேலும் பார்க்க

பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கை: இபிஎஸ் விமர்சனம்!

மத்திய பட்ஜெட் ஒரு மாயாஜால அறிக்கையாகும். வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாகத் தோன்றுகிறது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்... மேலும் பார்க்க

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க