செய்திகள் :

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

post image

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவா் தனலட்சுமி (43). இவா் சென்னை கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தாா்.

கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த தனலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த அவா், தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் வீட்டிலிருந்த வாஷிங்மிஷின், ப்ரிட்ஜ், ஏ.சி உள்ளிட்ட இயந்திரங்களும் தீப்பிடித்து எரிந்து, பலத்த சத்தத்துடன் வெடித்தன.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு தனலட்சுமி தீயில் உடல் கருகி இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா் போலீஸாா், தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் ம... மேலும் பார்க்க

தபால்தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுக்கத் தயாா்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

தபால் துறை தயாராக இருந்தால் தினமணியுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மாணவா்கள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுப்போம் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன... மேலும் பார்க்க