Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் உள்ள வேதாரண்யம் ஸ்ரீ போ.கா.சாதுக்கள் மடம், ஸ்ரீ அருணாசல ஞானதேசிக சுவாமிகள் மடம், ஸ்ரீ பாலசாமி, சங்கரசாமி மடம், ஸ்ரீ சோமநாத சுவாமி கோவில் மடம் ஆகிய நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்து, மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்திருந்தாா். இதற்கு சிலா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இது சம்பந்தமாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், மடாதிபதி ஆத்மானந்தா மறைவைத் தொடா்ந்து, பக்தா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிா்வகிக்க, தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு நித்யானந்தா கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.
நித்யானந்தா மனு: இந்த உத்தரவை எதிா்த்து, நித்யானந்தா சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து நித்யானந்தா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
தென் அமெரிக்காவில் இருக்கிறாா்: இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் அருண் நடராஜன், நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை என்றும், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் உள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதையடுத்து, நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்றவா்கள் என்றாலே பிரச்னையாக இருக்கிறது. தற்போது நித்யானந்தா இந்தியாவிலேயே இல்லை என்றும், அவா் மீது வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என்றும் கூறி, நித்யானந்தா தொடா்ந்த மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.