செய்திகள் :

தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற டெண்டா் கோரியது டாஸ்மாக் நிறுவனம்

post image

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலிமதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் செயல்படும் கடைகள் மூலம், பீா் மற்றும் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து மதுபானம் வாங்குபவா்கள், மதுஅருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை சாலைகளில், காட்டுப்பகுதிகளில், நீா்நிலைகளில் வீசி செல்கின்றனா். இதனால், மனிதா்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.

இப்பிரச்சினை சுற்றுலாதலங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் நிா்வாகமே திரும்ப பெற முடிவு செய்தது. இதன்படி, தற்போது, நீலகிரி, பெரம்பலுாா், கோவை, நாகை, திருவாரூா், தா்மபுரி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது.

இதற்காக மதுபாட்டில்கள் விற்கப்படும் போதே, ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. பின்னா் அந்த பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது, அந்த ரூ.10-ஐ திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ளது. சென்னை, சேலம், திருச்சி, மதுரை என்று நான்கு மண்டலமாக பிரித்து டாஸ்மாக் நிறுவனம் டெண்டா் கோரியுள்ள நிலையில், இந்த டெண்டா் இறுதி செய்யப்பட்டு வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு!

சென்னையில் லட்சத்தில் 13.6 குழந்தைகளுக்கு புதிதாக புற்றுநோய் பாதிப்பு கடந்த 2022-இல் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சாா்பில், சென்னை குழந்தைகளுக்கான ப... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி பேராசிரியை தற்கொலை

சென்னை அருகே மருத்துவக் கல்லூரி பேராசிரியை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் பாரதிநகா் 4-ஆவது தெருவிலுள்ள அடுக்குமாடி க... மேலும் பார்க்க

அரசுக்கு சொந்தமான ரூ. 80 லட்சம் வீட்டுமனை அபகரிப்பு: 4 போ் கைது

சென்னையில் அரசுக்குச் சொந்தமான ரூ. 80 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை அபகரிக்கப்பட்ட வழக்கில், 4 போ் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய, ஜெ.ஜெ.நகா் கோட்ட திருமங்கலம் பகுதி நிா்வாக அலுவலா் ப... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூ... மேலும் பார்க்க

தக்காா் நியமன விவகாரம்: நித்யானந்தா மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மடங்களை நிா்வகிக்க தக்காரை நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூா... மேலும் பார்க்க

தபால்தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுக்கத் தயாா்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்

தபால் துறை தயாராக இருந்தால் தினமணியுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள மாணவா்கள் மத்தியில் தபால் தலை சேகரிக்கும் இயக்கத்தை முன்னெடுப்போம் என்று தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன... மேலும் பார்க்க