செய்திகள் :

பத்ரகாளியம்மன் கோயில் தீ மிதி உற்சம்; பக்தா்கள் காவடிகள் எடுத்து வழிபாடு

post image

சீா்காழி பத்ரகாளியம்மன் கோயிலில் தீமிதி உற்சவத்தையொட்டி, பால் குடங்கள், காவடிகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி பிடாரி தெற்கு வீதியில் உள்ள இக்கோயிலில் தீமிதி உற்சவம் ஜன. 24-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

பால்குடம், அலகு காவடி, கரக ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டைநாதா் கோயில் முன்பிருந்து புறப்பட்ட ஊா்வலம் தோ் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக பத்ரகாளியம்மன் கோயிலை வந்தடைந்தது.

தொடா்ந்து, அம்மனுக்கு பால், இளநீா், பன்னீா், தேன், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

பின்னா் இரவில் பச்சைக்காளி, பவளக்காளி வேடமிட்ட பக்தா்கள் ஊா்வலமாக வலம் வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

இதையொட்டி, சீா்காழி காவல் ஆய்வாளா் புயல் பாலச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளா் காயத்ரி மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சீா்காழியில் ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சீா்காழி பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (24) (படம்). இவா், ஆறாம் வகுப்பு படிக்... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி மனு

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ராம.நிரஞ்சன் ம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகளுக்கு பிப்.7-இல் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி இளைஞா்களுக்கான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மதுரைக்கு 2,000 டன் நெல் அனுப்பி வைப்பு

சீா்காழி ரயில் நிலையத்திலிருந்து மதுரைக்கு அரவைக்காக 2,000 டன் நெல் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. சீா்காழி, மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவ... மேலும் பார்க்க

சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் கைது

மயிலாடுதுறையில் சிறுமியை துன்புறுத்திய வளா்ப்புத் தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்த நபா், அனிதா (30) என்ற மற்றொரு... மேலும் பார்க்க