செய்திகள் :

ஜாா்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

post image

ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம் லால்பானியா பகுதியில் சிஆா்பிஎஃப் படையின் கோப்ரா கமாண்டோ படையினா், மாநில காவல் துறையினா் இணைந்து நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது லுகு குன்றுகளில் இருந்த நக்ஸல்கள், கோப்ரா படையினா் மற்றும் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனா். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

கொல்லப்பட்ட நக்ஸல்களில் விவேக் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி, அரவிந்த் யாதவ் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம், சாஹேப்ராம் மாஜி என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, மூன்று ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, 8 நாட்டுத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தற்போது நடைபெற்ற நக்ஸல்கள் என்கவுன்ட்டா் மூலம், பொக்காரோ உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு சோட்டாநாக்பூா் மண்டலத்தில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.

ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது: குடியரசுத் தலைவர்

கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.ஆண்டுதோறும் ஏப். 21 ஆம் தேத... மேலும் பார்க்க

நிதி முறைகேடுகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை பகிா்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு

பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளில் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு நிகழ்நிதியாண்டில் ரூ.15 ஆயிரம் கோடியை பகிா்ந்தளிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக அத் துறையி... மேலும் பார்க்க

நாடாளுமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பான வழக்கு விசாரணையின்போது, ‘நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது: குடிமைப் பணிகள் நாளில் பிரதமா் மோடி பேச்சு

புது தில்லி: காலாவதியான நடைமுறைகளைக்கொண்டு அரசுத் துறைகள் செயல்படக் கூடாது என வலியுறுத்திய பிரதமா் மோடி, நாட்டின் வளா்ச்சியை முதன்மைப்படுத்தி அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை மத்திய பாஜக அரசு வகுத... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையெழுத்தாக வாய்ப்பு: நிா்மலா சீதாராமன்

சான் ஃபிரான்சிஸ்கோ, ஏப்.21: ‘அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பா்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ள... மேலும் பார்க்க

பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமாா் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க