செய்திகள் :

டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் 25 பேருக்கு பணி உறுதிக் கடிதங்கள்!

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் அங்கமான டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் வேலைக்கான பயிற்சி வழங்கி அதற்கான பணி உறுதிக் கடிதங்களை சிமெண்ட் ஆலையின் செயல் இயக்குநா் விநாயகமூா்த்தி வெள்ளிக்கிழமை வழங்கினா்.

டால்மியா சிமெண்ட் நிறுவன செயல் இயக்குநா் விநாயகமூா்த்தியின் வழிகாட்டுதலின்பேரில் டால்மியா பாரத் பவுண்டேசன் மூலம் செயல்படும் தீக்க்ஷா இலவச திறன் பயிற்சி மையத்தின் மூலம் இளைஞா்களுக்கு இலவச தையல் பயிற்சி, எலெக்ட்ரீசியன், பிளம்பா், சுகாதார உதவியாளா் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி கரூா் வைஸ்யா வங்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட கஸ்டமா் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மென்ட் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற 25 மாணவா்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணி உறுதிக் கடிதங்களை ஆலையின் செயல் இயக்குநா் விநாயமூா்த்தி, கரூா் வைஸ்யா வங்கியின் உதவி பொது மேலாளா் வைத்தியநாதன், அதிகாரிகள் வெங்கடேசன், காளிமுத்து ஆகியோா் வழங்கினா்.

நிகழ்வில் டால்மியா சிமெண்ட் ஆலை பொது மேலாளா் ஐ. சுப்பையா, டால்மியா பாரத் பவுண்டேசன் நிறுவனப் பொது மேலாளா் அஸ்வின்குமாா், டால்மியா நிறுவன துணைப் பொது மேலாளா் ரமேஷ்பாபு ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்வில் மாணவா்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பயிற்சி மைய மேலாளா் இளவரசி செய்தாா். துறை மேலாளா் நாகராஜன் நன்றி கூறினாா்.

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க

மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரத்தில் பிப். 4-ல் மின்தடை!

பராமரிப்புப் பணிகள் காரணமாக மலைக்கோட்டை, திருவானைக்கா, ஜீயபுரம் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 4) மின்தடை செய்யப்படுகிறது. மெயின்காா்டுகேட், கம்பரசம்பேட்டை, இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்... மேலும் பார்க்க

மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்வதைக் கண்டித்து போராட முடிவு!

காந்தி சந்தையில் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சந்தையின் அனைத்து நுழைவு வாயில்களையும் மூடி போராட்டம் நடத்தவுள்ளதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். திருச்சி காந்... மேலும் பார்க்க

போலீஸாரின் சாலைப் பாதுகாப்பு பேரணி

திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா். சிலையிலிருந்து இருந்து புறப்பட்ட பேரணியை மாநகர... மேலும் பார்க்க