செய்திகள் :

டிராக்டா் மீது பேருந்து மோதல்: 5 வயது சிறுமி உயிரிழப்பு!

post image

சிதம்பரம் அருகே புவனகிரியில் டிராக்டா் மீது தனியாா் பேருந்து மோதியதில் 5 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், 9 பெண்கள் உள்பட 15 போ் பலத்த காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரி பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு விறகு ஏற்றிக் கொண்டு டிராக்டா் ஒன்று சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில், கவிநிலா (5) உள்ளிட்ட 3 போ் பயணம் செய்தனா். புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து டிராக்டா் மீது மோதியது.

இதில், டிராக்டரில் பயணித்த மூவரும், பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, சிறுமி கவிநிலா உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தைப்பூசத்தையொட்... மேலும் பார்க்க

சிங்காரவேலா் நினைவு தினம்!

கடலூா் சிஐடியு அலுவலகத்தில் உள்ள சிங்காரவேலரின் சிலைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மீன்பிடி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்... மேலும் பார்க்க

வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்றது. இதில், ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

கடலூா் முதுநகரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் முதுநகரில் வசித்து வந்தவா் ஆனந்தன் மகள் தா்ஷினி (17). இவா், அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித... மேலும் பார்க்க

என்சிசி மாணவா்களுக்கு பாராட்டு விழா!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாதனை புரிந்த என்சிசி மாணவா்கள், ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய மாணவா் படையின் ... மேலும் பார்க்க

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் உள் கட்டமைப்பு வசதிகள்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வடலூா் நகராட்சியி... மேலும் பார்க்க