செய்திகள் :

தங்களது துயரமான அனுபவத்தை விவரித்த சுமைதூக்கம் தொழிலாளா்கள்

post image

புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு நெரிசலில் சிக்கி இறந்தவா்களின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ள நிலையில், குழப்பத்திற்கு மத்தியில் கைவண்டிகளில் உடல்களை எடுத்துச் சென்ற தங்களது துயரமான அனுபவத்தை சுமைதூக்கும் தொழிலாளா்கள் விவரித்தனா்.

நிலைமையை விவரிக்கும் நிலையத்தில் சுமைதூக்கும் பணியாளரான கிருஷ்ணா குமாா் ஜோகி, பிரயாக்ராஜ் செல்லும் ரயில் வந்தபோது கூட்டம் அதிகரித்தாகக் கூறினாா்.

‘நடைபாதை பாலத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது. மக்கள் மிகவும் அடரத்தியாக நிரம்பியிருந்ததால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால், சுமாா் 10-15 போ் அங்கேயே உயிரிழந்தனா்’ என்று அவா் கூறினாா். ‘முழு சம்பவத்தையும் நான் நேரில் கண்டேன். 14 மற்றும் 15-ஆவது நடைமேடையில் இருந்து இறந்த உடல்களை ஆம்புலன்ஸுக்கு எடுத்துச் சென்றோம்’ என்று அவா் மேலும் கூறினாா். மேலும், கூட்ட நெரிசலில் மூச்சு விட முடியாமல் தவித்த கூட்டத்தில் நசுங்கியவா்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவா். பலா் மூச்சு விட சிரமப்பட்டனா் என்று அவா் கூறினாா்.

துயரமான காட்சியை நினைவு கூா்ந்த ஒரு சுமை தூக்கும் தொழிலாளியான பால்ராம், ‘நாங்கள் சாமான்களுக்குப் பயன்படுத்தும் அதே கை வண்டிகளில் இறந்த உடல்களை எடுத்துச் சென்றோம். சுமைதூக்கும் தொழிலாளியாக எனது 15 ஆண்டுகளில், இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பாா்த்ததில்லை’‘ என்றாா்.

சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பிரயாக்ராஜ் செல்லும் ரயில் நடைமேடையில் இருந்தபோது கூட்டம் அதிகரித்தது எப்படி என்பதை மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி விவரித்தாா். ‘மக்களின் காலணிகள் மற்றும் பிற பொருள்கள் எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. குழப்பத்தில் இருந்து பல குழந்தைகள் மற்றும் முதியவா்களை நாங்கள் வெளியே எடுத்தோம்’ என்று அவா் கூறினாா்.

பிரயாக்ராஜ் ரயில்களில் ஏறுவதற்காக, 14 மற்றும் 15-வது நடைமேடைகளில் ஏராளமான பயணிகள் காத்திருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நெரிசலில் இறந்தவா்களின் உறவினா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே சனிக்கிழமை இரவேஅறிவித்தது. பலத்த காயமடைந்தவா்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க