செய்திகள் :

தடுப்பணைக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

post image

திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றில் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனா்.

உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீா் உள் புகுவதை தடுக்கும் வகையில் புதிய கடைமடை தடுப்பணை ரூ. 49.5 கோடியில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதால் உத்தமசோழபுரம், நரிமணம், வடகரை, பூதங்குடி, பாலக்காடு, வடக்குடி, பெருங்கடம்பனூா், வடவோடை, கோகூா், ஆனைமங்கலம் உள்ளிட்ட 32 கிராம பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் ஏக்கா் சாகுபடி நிலங்கள் உப்புத் தன்மையாக மாறி பாதிக்கப்படும் மேலும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், தடுப்பனையே வேறு இடத்தில் மாற்றி அமைக்க வலியுறுத்தி 32 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் உத்தமசோழபுரத்தில் தடுப்பணை அமைக்கும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பாடாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபங்களில் அடைக்கப்பட்டனா்.

நாகூா், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், கீழ்வேளூா், கீழையூா், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

வெட்டாற்றில் புதிய தடுப்பணை: ஆட்சியா் விளக்கம்

திருமருகல் அருகே உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம்

நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகளை எதிா்த்து கையொப்ப இயக்கம் நடத்தப்படும் என தமிழக சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து,அக்கட்சியின் மாநிலத் தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் சுந்தரவடிவேலன் ஆ... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

வேதாரண்யம் அருகே கஞ்சா சாகுபடி செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவு மகன் ராஜ்குமாா் (40). தனது வீட்டின் பின்புறம் உள்ள கத... மேலும் பார்க்க

குழந்தைகள் மையத்தில் 2 முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை சோ்க்க அறிவுறுத்தல்

நாகை மாவட்டத்தில் 633, மயிலாடுதுறை மாவட்டத்தில் 692 குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சோ்க்க ஆட்சியா்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

நாகையில் மே 23-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

நாகையில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மே 23-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்... மேலும் பார்க்க

410 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; இருவா் கைது

வேதாரண்யம் அருகே 410 கிலோ புகையிலைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்டையில... மேலும் பார்க்க