செய்திகள் :

தண்டவாளத்தில் அமர்ந்த தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள்; பெரியப்பாவுடன் ரயில் மோதி இறந்த பரிதாபம்!

post image

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகில் உள்ள ஜெகத்புரா பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் சுமித், குடும்ப பிரச்னையில் தனது மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டு தற்கொலை செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார். அவர் அங்குள்ள ரயில்வே கிராஸிங்கில் அமர்ந்து கொண்டு தனது உறவினர் ஒருவருக்கு வீடியோ கால் செய்து, தான் அமர்ந்திருந்த இடத்தை காட்டி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். மேற்கொண்டு தகவல்களை கேட்டு பெறுவதற்குள் சுமித் போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து அந்த நபர் இது குறித்து சுமித்தின் 15 வயது மகள் நிஷா மற்றும் சுமித்தின் அண்ணன் கணேஷ் ஆகியோருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே அவர்கள் இரண்டு பேரும் ரயில் தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.

சம்பவம் நடந்த இடம்

ரயில்வே கிராஸிங் ஒன்றில் சுமித் அமர்ந்திருப்பதை இருவரும் பார்த்து அவரிடம் சென்றனர். இருவரும் பேசி சமாதானப்படுத்தி ரயில் தண்டவாளத்தில் இருந்து அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால் சுமித் சம்பவ இடத்தில் இருந்து வர மறுத்தார். ஆனாலும் இருவரும் சேர்ந்து சுமித்தை அங்கிருந்து வரும்படி கேட்டு கெஞ்சினர். அதற்குள் தூரத்தில் ரயில் ஒன்று வந்தது. ரயில் அவர்களை நெருங்கியபோதும்கூட கடைசி முயற்சியாக சுமித்தை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் நிஷாவும், கணேஷும் ஈடுபட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் மீது ஹரித்வார் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிச்சென்றது. இதில் சம்பவ இடத்தில் மூவரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் உடைந்து கிடந்த மொபைல் போனை வைத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூரில் தொடர்ந்து சதமடித்த வெயில்... வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூரிலிருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் மிகவும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில... மேலும் பார்க்க

கடலூர், கள்ளக்குறிச்சி: ஏரி, ஓடையில் குளிக்கச் சென்ற 5 சிறுவர், சிறுமியர் நீரில் மூழ்கி பலியான சோகம்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் இருக்கிறது வடக்கு கொளக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த உபையதுல்லா (9), முகமது ஹபில் (10), ஷேக் அப்துல் ரகுமான் (13) போன்றவர்கள் நண்பர்கள். இவர்கள் ம... மேலும் பார்க்க

உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரி... மேலும் பார்க்க

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவ... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல்லெறிந்த இளைஞர்கள்; காட்டில் அத்துமீறியதால் பரிதாபமாக பறிபோன உயிர் - என்ன நடந்தது?

ரம்ஜான் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கேரளா மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஊசி... மேலும் பார்க்க

Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video

​மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத... மேலும் பார்க்க