செய்திகள் :

உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

post image

டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர்.

காவல்துறை

அது உச்சிக்கு சென்றபோது, அதன் ​​ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நிகில், பிரியங்காவின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

நிகில் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரோலர் கோஸ்டர்
ரோலர் கோஸ்டர்

பிரியங்காவின் சகோதரர் மோஹித், ``அந்தப் பூங்காவில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. என் சகோதரி மிகவும் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால்தான் அவர் உயிர் இழந்தார். இப்போதுதான் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி, ரோலர் கோஸ்டர் உட்பட, பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டிருக்கிறது." என்றார். விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

பைக்கிற்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன்; பின் சீட்டிலிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் ஹரிகிருஸ்ணன் (21) ப்ளஸ் 1 படித்துவிட்டு எல்க்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் இவ... மேலும் பார்க்க

தேன் கூட்டில் கல்லெறிந்த இளைஞர்கள்; காட்டில் அத்துமீறியதால் பரிதாபமாக பறிபோன உயிர் - என்ன நடந்தது?

ரம்ஜான் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கேரளா மாநிலம் கோழிகோடு பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். பல இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள ஊசி... மேலும் பார்க்க

Malaysia Fire Accident : மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து பெரும் தீ விபத்து | Shocking Video

​மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் இன்று காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் நிறுவனத்தின் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த தீ விபத... மேலும் பார்க்க

ஒடிஸா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் ரயில்.. மீட்புப் பணிகள் துரிதம் - என்ன நடந்தது?

இன்று பெங்களூருவில் இருந்து சென்ற ரயில் ஒன்று ஒடிசா மாநிலம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இது பெங்களூருவில் இருந்து குவாஹாத்தி செல்லும் காமக்யா விரைவு ரயில் ஆகும். விபத்திற்கு காரணம் என்ன?... மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராய் காரில் மோதிய பஸ்.. அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகே விபத்து; என்ன நடந்தது?

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது படங்களில் நடிக்காமல் மகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்ல... மேலும் பார்க்க

Coonoor: குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் தீ விபத்து; நள்ளிரவில் கடைகள் எரிந்து சேதம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் மையப்பகுதியில் நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான ஒருங்கிணைந்த சந்தை செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழைமை வாய்ந்த இந்த சந்தையில் உள்ள கடைகளை வணிகர்கள் மாத வாடகை செலு... மேலும் பார்க்க