செய்திகள் :

தஞ்சாவூர்: ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு மரணம்.. என்ன காரணம்?

post image

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் காவேரி செல்வி (24). கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் தஞ்சாவூரில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்களுக்கான குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில், காவேரி செல்வி நேற்று வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதைபார்த்த சக காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் காவேரி செல்வி உடலை கைப்பற்றி, உடற் கூறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் போலீஸின் தற்கொலை குறித்த தகவல் எங்கும் பரவ போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சிலரிடம் பேசினோம், காவேரி செல்வி ஒருவரை காதலித்து வந்த நிலையில் காதலனுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. சக காவலர்களுடன் கூட சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். போலீஸாக இருந்தாலும் காவேரி செல்வியும் ஒரு பெண் தான். அவர் இந்த விவகாரத்தை எதிர்கொள்ள முடியாது என நினைத்து விட்டதாக தெரிகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

இந்தநிலையில் காவேரி செல்வி தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரம் தான் காரணமா அல்லது வேறு எதாவது இருக்குமா என்பது குறித்து தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தற்கொலை தீர்வில்லை என்பதை அவர் உணராமல் சென்று விட்டார். இது குறித்து தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு; போலீஸ் ஸ்டேஷன் முன்பு பாடை கட்டி, ஒப்பாரி போராட்டம் நடத்திய மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54). விவசாயியான இவர் தனது நிலத்தை கிரயம் செய்து கொடுத்து, திருகுமார் என்பவரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பணம... மேலும் பார்க்க

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்பிலான நிலம் மோசடியா? - போராட்டத்தில் விவசாயிகள்- நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வள்ளிபுரத்தில் அமாவாசை என்பவருக்குச் சொந்தமான 2.97 ஏக்கர் நிலம் மோகனமூர்த்தி, சரவணக்குமார் ஆகிய சகோதரர்கள் இருவருக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

`மேடம், தம்பியை விட்டுருங்க ப்ளீஸ்'- போலீஸ் ஸ்டேஷன் முன் விஷம் குடித்த சகோதரிகள்; ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு துர்கா (31), மேனகா (29), கிருத்திகா (27), தினேஷ் (25) என நான்கு பிள்ளைகள். இந்த நிலையில் மது விற்பனை தொடர்ப... மேலும் பார்க்க

`பொம்மை தரேன்’ - 10 வயது சிறுமி, சிறார்வதை செய்யப்பட்டு 6வது மாடிலிருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்

மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் உள்ள 10 மாடி குடியிருப்பில் இரவு திடீரென மிகப்பெரிய சத்தம் கேட்டது. உடனே கட்டடத்தில் வசிப்பவர்கள் வெளியில் வந்து என்னவென்று டார்ச் லைட் அடித்து பார்த்தனர். இதில் 10 வய... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மக்கள் ஏமாந்தது அவர்களுக்கே தெரியவில்லை!’ - `கோ ஃப்ரீ சைக்கிள்’ மோசடி குறித்து போலீஸ்

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட `கோ ஃபிரீ சைக்கிள்’ (Go Free Cycles) என்ற சைக்கிள் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் தன்னுடைய அலுவலகத்தை திறந்தது. அதே வேகத்தில், `புதுச்சேரி வரும் சுற்ற... மேலும் பார்க்க

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45). இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவி... மேலும் பார்க்க