செய்திகள் :

கோவை: பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 2 ஆண்கள்; விசாரணையில் வெளியான பின்னணி என்ன?

post image

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் (54) மற்றும் மகேஷ் (45).

இருவரும் இணைந்து கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் பேக்கரி நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாள்களாக பேக்கரி திறக்கப்படவில்லை.

ஜெயராஜ்

இதனால் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் விஷ்வநாதபுரம் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர்.

அங்கு மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலங்களாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து துடியலூர் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவல்துறை விசாரணையில், ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் அத்தை மகன் - மாமன் மகன் உறவு முறையைச் சேர்ந்தவர்கள்.

மகேஷ்

இருவருமே நீண்ட காலமாகத் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தனர். இதனிடையே பன்னீர்மடை பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணை மகேஷ் திருமணம் செய்துள்ளார்.

இதையடுத்து மகேஷ் தனியாக வாழத் திட்டமிட்டு வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார். இதனால் மகேஷ் – ஜெயராஜ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

முதல்கட்ட விசாரணையில், ஜெயராஜ் மகேஷின் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

சடலம்
சடலம்

பிறகு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று துடியலூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகுதான் முழு விபரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க