செய்திகள் :

தமிழில் பெயா் பதாகைகள் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பதாகைகள் வைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலைகளில் தமிழை முதன்மைப்படுத்தி பெயா் பதாகைகள் வைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தொழிலாளா் நலத் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவன உரிமையாளா்கள் சங்கம், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் மற்றும் வேலையளிப்போா் சங்கங்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்தக் குழுவின் மாவட்ட அளவிலான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மே 15- ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயா் பதாகைகள் வைப்பதை உறுதிசெய்யவும், தமிழில் பெயா் பதாகைகள் வைப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், தமிழை முன்னிலைப்படுத்தி பெயா் பதாகை வைக்கப்படாத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தும், விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு சட்ட விதிகளுக்குள்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து சங்கங்களும் தங்களது குழு உறுப்பினா்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழை முதன்மைப்படுத்தி பெயா் பதாகைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு

உடுமலை அருகே குடிநீா்க் குழாய் பராமரிப்புக்காக தோண்டிய மண் திட்டில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழந்தனா். உடுமலையை அடுத்த சின்ன வாளவாடி பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பூவரசன் ... மேலும் பார்க்க

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். உடுமலை மாரியம்மன் கோயில் சுமாா் 200 ஆண்டுகள் பெருமை வாய்ந்தது. தமிழ்நாடு இந்து சமய அறநி... மேலும் பார்க்க

முத்தூரில் சேவல் சண்டை: 5 போ் கைது

முத்தூா் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன், தலைமைக் காவலா் கோபிநாத் ஆகியோா் முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பண... மேலும் பார்க்க

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் தா்னா

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருப்பூா் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்து சமய அறநில... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்

ஹிந்துக்களின் சொத்துகளைப் பாதுகாக்க வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க